Skip to main content

Saivam - Ancient Tamil & Other Spiritual Texts

Shivakkiyam in Tamil, Transliteration, Translation

Tamil Translation Transliteration
1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
1. Running, running, running, running, the mixed Jyothi
Counting, counting, counting, counting, days passed by
Withering, withering, withering, withering, the withered men
Crores, crores, crores, crores of crores born from numbers (Om)
1. Oodi oodi oodi oodi utkalandha jothiyai
Naadi naadi naadi naadi naadhalum kazhindhupoi
Vaadi vaadi vaadi vaadi maandupona maandhargal
Kodi kodi kodi kodi ennirandha kodhiye (Om)
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
இதுவுமது
2. ennilē irunda onṟaiyāṉ aṟintatillaiyē
ennilē irunda onṟaiyāṉ aṟindu koṇṭapin
ennilē irunda onṟaiyāvar kāṇavallarō
ennilē irundiruntu yānuṇarntu koṇḍavaṉē (ōm)
Iduvumathu
2. I did not know the one that was within me
After knowing the one that was within me
Can others see the one that was within me?
I am the one who realized from within (Om)
This is ours too
3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)
யோக நிலை
3. nānatētu nīyatētu naṭuvil ninṟatētadā
kōnatētu kuruvatētu kūṟiṭum kulāmarē
ānatētu aḻivatētu appuṟattil appuṟam
īnatētu rāma rāma rāmavendra nāmāmē (ōm)
Yōka nilai
3. What is mine, what is yours, standing in between
What belongs to the tip, what belongs to the teacher, O clan trees that tell
What is existence, what is destruction, beyond that beyond
What is life, the name chanted as Ram Ram Ram (Om)
Yoga Pose
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
4. anjezhuththilē piṟantu anjezhuththilē vaḷarnthu
anjezhuthtai ōthugiṉṟa panjabūtha pāvikāḷ
anjezhuthtilōr ezhuthu aṟintukūṟa vallarēl
anjal anjal eṉṟunātan ampalattil āḍumē. (ōm)
Virāṭ sorūpam
4. Born in the five letters, grown in the five letters
The five elemental beings who recite the five letters
If among the five letters one can understand a letter
The Lord repeatedly says “Anjal Anjal” and dances in the temple. (Om)
Virat form
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
தெய்வ சொரூபம்
5. idathukaṇkaḷ cantiraṉ valatu kaṇkaḷ sūriyaṉ
iṭakkai caṅkucakkaram valakkai sūlamānamazu
eṭuttapātam nīḷmuṭi eṇticaikkum appuṟam
uṭalkalantu niṉṟamāyam yāvarkāṇa vallarē (ōm)
Theiva sorūpam
5. Left eyes the moon, right eyes the sun
Left side the discus, right side the spear rain
The raised foot, long hair, and the sacred thread after that
The body fused and stood as illusion, who can see all this? (Om)
Divine Form
6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
தேகநிலை
6. Uruvumalla veliiyumalla ondraimevi ninrathalla
Maruvumalla kaadhamalla matirathalla atrathalla
Periyathalla siriyathalla pesumaavi thaanumalla
Ariyataagi ninranaermai yaavarkaana vallare (Om)
tēka nilai
6. It is neither form nor formless, not standing on anything
Neither intoxicating nor love, nor something else, not lacking
Neither big nor small, it is not the speaker itself
When it stands rare and true, who can see all? (Om)
Temperature
7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)
அட்சர நிலை
7. maṇkalaṅ kaviḻndapōthu vaiththuvaiththu aṭukkuvār
veṇkalaṅ kaviḻndapōthu vēṇumendru pēṇuvār
ṇaṅkalaṅ kaviḻndapōthu nāṛumendru pōduvār
eṅkalanthu ninramāyam enna māya mīcanē (Ōm)
Akṣara nilai
7. When the bronze pot falls, they will set it down and stack it.
When the white pot falls, they will care for it as needed.
When the wet pot falls, they will place it on the floor.
After the five pots have stood, what illusion is this, oh bearded one (Om).
Letter status
8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)
இதுவுமது
8. āṉavañ ceḻuttuḷē aṇṭamum akaṇṭamum
āṉavañ ceḻuttuḷē ātiyāṉ mūvarum
āṉavañ ceḻuttuḷē akāramum mahāramum
āṉavañ ceḻuttuḷē aṭaṅkalāva luṟṟatē (ōm)
ithuvumathu
8. In the syllable ‘Aanava’ is the universe and the infinite
In the syllable ‘Aanava’ are the primordial three
In the syllable ‘Aanava’ are the letters A and Ma
In the syllable ‘Aanava’ nothing else is contained (Om)
This is also ours
9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
ஞானநிலை
9. ninaippathonru kandilēn nīyalātu vērilai
ninaippumāy maṛappumāy ninṟamāy kai māykaiyai
anaiththumāy akaṇṭamāy anādhimuṉ anādhiyāy
enakkuḷnī uṉakkuḷnāṉ irukkumāṟu eṅṅanē (ōm)
ñāṉanilai
9. I cannot find a single thought other than you
Like thinking and forgetting, like standing and illusion
Like everything, endless, without beginning or end
Within me you, within you me, how can this be (Om)
Gnananilai
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
ஞானம்
10. Paṇṭunāṉ paṟittediṟinta panmalarhaḷ ettanai
Pāḻilē sebituvitta manthiraṅkaḷ ettanai
Miṇṭarāyt tiṟintapōtu iraithanīrkaḷ ettanai
Mīḷavum civālayaṅkaḷ cūḻavantatu ettanai (Ōm)
ñāṉam
10. How many ancient, magnificent flowers have withered away
How many mantras have been lost in vain
When the clouds were wandering, how many did you protect
How many times have the Shiva temples been surrounded again (Om)
Wisdom
20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
ōmna ma civāyamē uṇarndumey teḷindupin
ōmna ma civāyamē uṇarndumey uṇarndapin
ōmna ma civāyamē uṭkalaṇdu nirkumē (ōm)
20. Om Namah Sivaya, after realizing the true reality
Om Namah Sivaya, after being fully clear with true understanding
Om Namah Sivaya, after realizing the true reality
Om Namah Sivaya will firmly remain within (Om)